பொலிஸாரின் தடுப்பு காவலில் உயிரிழந்த இளைஞன் விதுஷனின் உடலம் கொழும்புக்கு மாற்றம்
மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த விதுஷசன் என்ற இளைஞன் திடீரென உயிரிழந்த நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிபதி ஏ,சி ரிஷ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, புதைக்கப்பட்ட விதுஷசனின் சடலத்தை மீண்டும் 21ம் திகதி திங்கட்கிழமை தோண்டி எடுத்து இலங்கையிலேயே இத்துறையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முன்னிலையில் மீளவும் பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த வகையில், தோண்டி எடுக்கபட்ட விதுஷனின் சடலம் அனுராதபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் இன்றைய தினம் உடல் கூற்று பரிசோதனைக்காக கொழும்புக்கு மாற்றபட்டுள்ளதாக அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப் பட்ட நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
