40 வருடங்களாக காடாக இருந்த மட்டக்களப்பு- விதானையார் வீதி மீண்டும் திறப்பு
மட்டக்களப்பு- மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதி கடந்த 40 வருடங்களாக பற்றைக்காடாக காணப்பட்டு வந்துள்ள நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில், மேற்படி விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரிடம் அந்தப் பகுதி மக்கள் எடுத்துக் கூறியதையடுத்து இந்த வீதியியை ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, பாவனைக்குரிய வீதியாக செப்பனிடும் பணி நேற்று (28.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீதி திறப்பு
இதன்போது, அந்தப் பகுதி பொதுமக்கள் பிரதேச சபையின் இந்த செயற்பாட்டிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள சுமார் 150 இற்கும் மேற்பட்ட விவசாயிகளின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்த இந்த பாதை விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகின்றதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

