பொத்துவில் தொடங்கி பொலிகண்டி போராட்டம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிற்கு மாபெரும் வெற்றிப் பேரணி
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அறவழி போராட்டம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிற்கு மாபெரும் வெற்றிப் பேரணியாக அமைந்துள்ளது என்று இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி பேரணியில் கொட்டும் மழையிலும் போராடும் எம் உறவுகளை பார்த்து நாங்கள் வியக்கின்றோம்.
எமது தொப்புள் கொடி உறவுகளான வடக்கு,கிழக்கு மக்களுக்கு மலையக மக்கள் சார்பாக பாராட்டுக்களையும், ஆதரவினையும் தர நாங்கள் தயாராகவே உள்ளோம்.
மலையக மக்கள் அனைவரும் இணைந்து போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினையும் தருவதற்கு தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri