கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பதவியேற்ற பேராசிரியர் பிரதீபன்
கிழக்கு பல்கலைக்கழத்தின் 11ஆவது உபவேந்தராக நியமிக்கப்பட்ட முன்னாள் விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் நேற்று (17) தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த பல்கலைக்கழகத்தின் 11ஆவது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்றது.
நேர்முக பரீட்சை
இதில் 8 பேர் போட்டியிட்ட நிலையில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், உட்பட 3 பேர் தெரிவு செய்யப்பட்டு பல்கலைகழக மானிய ஆணைக் குழுவிற்கு அனுப்பிய அந்த பெயர்பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.
இதனடிப்படையில் முதல் நிலையிலுள்ளதையடுத்து முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபனை ஜனாதிபதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11ஆவது உபவேந்தராக நியமித்து அதற்கான கடிதத்தினை நேற்று (17) அனுப்பிவைத்துள்ளார்.
இதனையடுத்து புதிய உபவேந்தர் நேற்று பகல் 12.00 மணியளவில் தமது கடமையை உத்தியோக பூர்வமாக பெறுப்பேற்றுக் கொண்டார்.





உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
