கால்நடை மருத்துவர் மற்றும் நால்வர் கைது
போலி ஆவணங்களை கொண்டு சினையான பசுக்கள் உட்பட 20 மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் பதவிய பிரிவின் கால்நடை மருத்துவர் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கால்நடை மருத்துவரையும் மற்றுமொருவரையும் கெபித்திகொல்லேவ மாவட்ட நீதவான், தலா 500,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
ஏனைய மூன்று பேரையும் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
போலி ஆவணம்
குறித்த கால்நடை மருத்துவர், திருடப்பட்ட சினையான பசுக்களை கொண்டு செல்வதற்கு போலி ஆவணத்தை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில், தலைமறைவான பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri