வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஆரம்பமாகியுள்ள வியாபார நடவடிக்கைகள்
வெசாக் (Vesak) பண்டிகைக்காலம் நெருங்கி வருவதால் வெசாக் கூடுகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தும் நடவடிக்கைகளில் வியாபாரிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு மே 23ஆம் திகதி அன்று கொண்டாடப்படவிருக்கும் வெசாக் பண்டிகைக்கான வியாபார நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் மறைவை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் முழு பௌர்ணமி அன்று பௌத்த மக்களால் வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
வெசாக் கூடுகள்
குறித்த நிகழ்வின்போது, பௌத்த மக்கள், வீடுகள் மற்றும் தங்களின் உடமைசார் இடங்களை வெசாக் கூடுகளை தொங்க விட்டு அலங்கரிப்பதனை பண்பாட்டு வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதற்கமைய, மக்கள் அவற்றை வாங்குவதில் அதிகமாக ஈடுபட்டு வருவதுடன் வியாபாரிகளும் அவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை, வெசாக் பண்டிகை தினங்களில் பௌத்த மக்கள் மட்டுமல்லாது ஏனைய மக்களும் வெசாக் கூடுகளை வாங்குவதிலும் வீடுகளை அவற்றால் அலங்கரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
