மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பரிணாமத்திற்கான நாடாளுமன்ற ஒன்றிய தலைவராக வேலு குமார் தெரிவு
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியால், மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பரிணாமத்திற்கான நாடாளுமன்ற ஒன்றியம் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒன்றியத்தின் தலைவராக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
உப தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா, நயனா வாசலகே மற்றும் உதயகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நாடாளுமன்றத்திற்குள், பல குழுக்கள் மற்றும் ஒன்றியங்கள் இயங்கி வருகின்றன.
மலையக பெருந்தோட்ட சமூகம்
எனினும், அவ்வாறு இயங்குகின்ற எந்த குழுவினாலும் நேரடியாக மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பிரச்சினைகள் ஆராயப்படுவது மிக குறைந்த மட்டத்திலேயே உள்ளது.

இதனால், மலையக பெருந்தோட்ட சமூகத்தின் எதிர்காலம் தொடர்பான, கொள்கை வகுப்புக்கள் மற்றும் செயற்றிட்டங்களை உருவாக்குதல் போன்றன இடம்பெறுவது இல்லை.
இவ் இடைவெளியை நீக்கும் வகையில், நேரடியாக மலையக பெருந்தோட்ட சமூகத்தை இலக்காக கொண்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே, தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்றத்தில் இவ் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri