தலையை துண்டித்து தண்ணீர் வழங்கிய எதிரிகள்! வஞ்சம் தீர்க்கப்பட்ட வரலாறு (Video)
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புத்தூர் என்ற ஊர் இருக்கிறது. அங்கிருந்து சில மைல் தூரத்தில் பிரான்மலை என்ற மலையும் அந்தப் பெயரோடு ஓர் ஊரும் உள்ளது.
சங்க காலத்தில், அந்த மலைக்குப் பறம்பு மலை என்ற பெயர் இருந்தது. அங்கேதான் வேள்பாரி என்னும் வள்ளல் வாழ்ந்துவந்தான்.
கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்த வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர்.
வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். இவரதுக் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு. பாரி பறம்புநாடு என்ற முந்நூறு (300) ஊர்களைக் கொண்ட பகுதியை ஆட்சி செய்தவர்.
அவ்வளவு சிறிய பகுதிகளை ஆட்சி செய்த போதிலும் அவர் மூவேந்தர்களை விடப் பெரும் புகழ் பெறக் காரணம் அவரது கொடைத் தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.
இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். கொடை வள்ளல் பாரி வேந்தன் தலை கொய்து கொல்லப்பட்டது ஏன்?
காணொளி வடிவில் தொகுப்பாக,

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
