வேலன் சுவாமியின் கைதை கண்டிக்கும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்
சிவில் உரிமை செயற்பாட்டாளரும், இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தும் மற்றொரு முயற்சி என பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சேர் எட் டேவி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துபொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சேர் எட் டேவி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
The arrest of Velan Swamigal in Jaffna is deeply disturbing and yet another attempt to intimidate those who speak up for the rights of Tamils.
— Ed Davey (@EdwardJDavey) January 20, 2023
I've asked the Foreign Secretary to make clear to his Sri Lankan counterparts that this harassment of civil society is unacceptable.
யாழ்ப்பாணத்தில் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமை மிகவும் கவலையளிக்கின்றது.தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தும் மற்றொரு முயற்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிவில் சமூகத்தின் இந்த துன்புறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை வெளிவிவகாரச் செயலாளரிடம் தனது இலங்கை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துமாறு நான் கேட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan
