தற்போதைய அரசாங்கத்தில் வாகன இறக்குமதி தீர்மானத்தின் நிலை
கடந்த அரசாங்கம் வாகன இறக்குமதித் தடையை படிப்படியாக நீக்குவதற்கு வழிவகுத்த நிதி நிலைமைகள், அந்த அரசாங்க மாற்றத்திற்குப் பின்னரும் மாறாமல் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
தேவையான தொழில்நுட்ப பகுப்பாய்வுகளை நடத்திய பின்னரே முன்னைய அரசாங்கம் பரிந்துரைகளை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 2025 பெப்ரவரி 1ஆம் திகதிக்குள், தனியார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கான திட்டங்களை முந்தைய நிர்வாகம் அறிவித்திருந்தது.
இறுதி முடிவு
நிதி நிலைமைகள் எதிர்பார்த்த பாதையில் தொடருமானால், தீர்மானத்தை தக்கவைத்துக்கொள்வது சாத்தியமாகும் என வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வாகன இறக்குமதி தொடர்பான இறுதி முடிவு தற்போதைய நிதியமைச்சகத்தினுடையது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri