வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு வாகன இறக்குமதி தொடர்பில் நம்பிக்கையுடன் இருப்போம் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் நல்ல பாதையில் செல்வதே இதற்கான காரணம் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தெமட்டகொட விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ( 9 ஆம் திகதி) நேற்று கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அரிசி வழங்கும் வேலைத்திட்டம்
இதேவேளை, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 27 இலட்சம் குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையிலுள்ள மொத்த குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனைப் பெற்றுக்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழில் இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்! வெடித்தது புதிய சர்ச்சை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
