மேல் மாகாண மக்களுக்கு குறைந்த விலையில் மரக்கறி
மக்களுக்கு நிவாரண விலையில் மரக்கறிகளை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் சதொச நிறுவனம் ஊடாக செயற்படுத்துவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலுள்ள 75 சதொச நிறுவனங்கள் ஊடாக, மக்களுக்கு நிவாரண விலையில் மரக்கறி விற்பனை செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 26 இடங்களிலும், கம்பஹா மாவட்டத்தில் 41 இடங்களிலும், களுத்துறை மாவட்டத்தின் 8 இடங்களிலும் மக்களுக்கு நிவாரண விலையில் மரக்கறி விற்பனை செய்யப்படவுள்ளது.
மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை ஏனைய மாகாணங்களுக்கும் விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam