நாட்டு மக்களுக்கு அதிகரிக்கும் சுமை!
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், கொழும்பு மெனிங் சந்தையில் மொத்த மரக்கறிகளின் விலைகள் ஒப்பீட்டளவில் அதிகமாகவே காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு உரம் இல்லாததால் பயிர்கள் அழிவடைந்துள்ளதுடன், விளைச்சல் குறைந்துள்ளது.
அனைத்து மரக்கறி வகைகளின் விலைகளும் உயர்வாகவே காணப்படுவதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷமிந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ லீக்ஸ் ரூ.160-180, கரட் ரூ.330-360, பீட்ரூட் ரூ.300-350, போஞ்சி ரூ.400-430, முட்டைகோஸ் ரூ. 130-170, கத்தரி ரூ. 180-200, குடை மிளகாய் ரூ. 500 மற்றும் தக்காளி ரூ.150-170 வரை விற்பனைச் செய்யப்படுகிறது.
பொதுவாக ஜனவரி மாதம் மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்து இருக்கும். ஆனால் இம்முறை விளைச்சல் குறைவினால் நிலைமை வேறுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாரிய அளவில் பயிர் செய்கை செய்யப்படும் பகுதிகளில் உரம் இல்லாமை அல்லது இருப்புகளின் அதிக விலையால் விவசாயிகள் போதுமான அளவு காய்கறிகளை பயிரிடவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.