அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்!
அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
விலைப்பட்டியல்
அந்த ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் அங்கீகரித்து வெளியிட்டுள்ளது.
27 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் புறக்கோட்டை பொது சந்தை உள்ளிட்ட பிரதான சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, நேற்றைய புறக்கோட்டை சந்தை நிலவரப்படி
1 கிலோகிராம் கீரி சம்பா ரூபா 240 - 300 ரூபாவாகவும்,
1 கிலோகிராம் சின்ன வெங்காயம் ரூபா 150 - 200 ரூபாவாகவும்,
1 கிலோகிராம் வெள்ளை சீனி ரூபா 240 - 242 ரூபாவாகவும்,
1 கிலோகிராம் கோதுமை மா ரூபா 140 - 150 ரூபாவாகவும்,
இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பொன்னி சம்பா ரூபா 275 - 280 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.








புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri