மரக்கறி விலைகள் 50 வீதம் அதிகரிக்கும்
அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் சுமார் 50 வீதம் அதிகரிக்கலாம் என கொழும்பு மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சந்தைக்கு வரும் மரக்கறியை ஏற்றிய சுமை ஊர்திகளில் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக குறைந்துள்ளமையே இதற்கு காரணம் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மலையகத்தில் அறுவடை ஆரம்பம்
அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மரக்கறிகளை ஏற்றி வரும் சுமை ஊர்திகள் சந்தைக்கு வருவது தாமதமாகி வருகிறது.
இந்த நிலையில், தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால், மலையக பிரதேசங்களில் லீக்ஸ், கெரட் ஆகியவற்றின் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மரக்கறிகள் உரிய நேரத்தில் கொழும்புக்கு வரவில்லை என்றால், அவை பழுதடைந்து விடக் கூடும்.
ஆயிரம் ரூபாயை தாண்டி கறி மிளாகாயின் விலை
இதனை தவிர போஞ்சி, தக்காளி, கறி மிளகாய் ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை ஒரு கிலோ கிராமுக்கு 500 முதல் 700 ரூபாவாக அதிகரித்துள்ளன.
அவற்றின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது எனவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தம்புள்ளை மற்றும் கண்டி பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளை இராணுவத்தின் உதவியுடன் கொழும்பு எடுத்து வருமாறு வர்த்தர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

தனது மகள் மற்றும் மனைவியுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா- வெளிவந்த புகைப்படங்கள் Cineulagam

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam
