இந்தியா தீர்வு தரும் என்று கனவு காண்கின்றார் சம்பந்தன்: வீரசேகர கிண்டல்
தமிழர்களுக்கு வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வை இந்தியா தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கனவு காண்கின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
அந்த ஒப்பந்தத்தை இனியும் தூக்கிப் பிடித்துக்கொண்டு துள்ளுவதில் எந்தப் பயனும் இல்லை.
வடக்கு - கிழக்கு இணைப்புக்கு வாய்ப்பில்லை
தமிழர்களுக்கு இந்தியா ஒருபோதும் தீர்வை வழங்கமாட்டாது.
ஆனால், தீர்வை இந்தியா வழங்கும் என்ற கனவுடன் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிறுபிள்ளைத்தனமாகக் கடிதம் எழுதுகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். வடக்கு - கிழக்கு இணைப்புக்கும், சமஷ்டித் தீர்வுக்கும் இங்கு ஒருபோதும் வாய்ப்பில்லை என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
