ஆதிசிவன் ஆலயம் முற்றாக அழிப்பு; கண்டுகொள்ளாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பரா.நந்தகுமார்

Sri Lankan Tamils Jaffna Vavuniya
By Kajinthan Mar 27, 2023 09:44 PM GMT
Report

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம் நேற்றையதினம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சைவ மகா சபை பொதுச் செயலாளர் வைத்தியர் பரா.நந்தகுமார் தெரிவித்துள்ளார். 

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

''இவ்வாறான ஆக்கிரமிப்புக்களை நிறுத்த அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென சர்வதேசத்திற்கு ஒரு செய்தியினை சொல்கின்றோம். எனவே நாளைய தினம் (27.03.23) 4 மணிக்கு நல்லூர் ஆலயச் சூழலில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்‘‘ என்றார்

ஆதிசிவன் ஆலயம் முற்றாக அழிப்பு; கண்டுகொள்ளாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பரா.நந்தகுமார் | Vedukkunarimalai Aadhi Lingeshwarar Temple

தமிழர்களின் இனப்பிரச்சினை

இந்த நாட்டிலே மிக நீண்ட காலமாக தமிழர்களின் இனப்பிரச்சினை புரையோடிப்போயுள்ளது. குறிப்பாக தமிழர்களின் தொன்மங்களாக இருக்கும் சிவ வழிபாட்டு தளங்கள் போருக்கு பின்னர் அழித்து வரும் நிலையில் மிக அண்மையில் மிக உக்கிரமாக அழிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையி்ல் ஆதிசிவன் ஆலயத்தில் அனைத்து சிலைகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. 2017 க்கு பின்னர் இவ் ஆலய வழிபாட்டிற்கு பல தடைகள் மற்றும் பரிபாலன சபையினர் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் காணப்படுகின்றது.

ஆதிசிவன் ஆலயம் முற்றாக அழிப்பு; கண்டுகொள்ளாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பரா.நந்தகுமார் | Vedukkunarimalai Aadhi Lingeshwarar Temple

இதைவிட நீதிமன்ற உத்தரவையும் மதிக்காது பொலிஸார் நடந்து வருகின்றனர். இதற்கு நீதியான விசாரணையை கோருகின்றோம். மிக சில நாட்களுக்கு முன் குருந்தூரில் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது. அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட எட்டுப்பட்டை சிவலிங்கம் ஆய்வுக்குட்படுத்தாது விகாரையின் உச்சியில் நிறுவியுள்ளனர்.

தொல்பொருள் திணைக்களம் அரச இயந்திரங்களின் ஆதரவோடு நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. வெவ்வேறு நடவடிக்கைகளுக்காக கருத்து வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில் ஏராளமான சைவசமயத்தவர்கள் இருக்கையில் எந்தவொரு உறுப்பினர்களும் கருத்துக்களை வெளியிடவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு நாள் கடந்துள்ள நிலையில் ஒரேயொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே நேரில் சம்பவ இடத்திற்குச் சென்றிருக்கின்றார். இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்டனங்கள் எதிர்ப்புக்கள் எதையும் காணவில்லை.

கண்டன போராட்டத்திற்கு அழைப்பு 

எனவே இவ்விடத்தில் காட்டமான கருத்தை பதிவு செய்கின்றேன். கன்னியா வெந்நீருற்றும் அநுராதபுர காலத்திற்குரியதென அச்சிடப்பட்டு தொல்லியற் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் மீட்கப்பட வேண்டும். யுனெஸ்கோ என்ற மரபுரிமை மையம் காணப்படுகையில் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இலங்கை செங்கல் கூட வாங்க முடியாமல் கடனில் சிக்கி சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கையில் இவ்வாறான சம்பவங்களை மேற்காண்டு வருகின்றனர். இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு இந் நிலைகள் தொடர்பான விடயங்களை முன்வைக்க வேண்டும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னரே எமது பழமைச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன. பொலன்னறுவை உட்பட பல்வேறு பிரதேசங்களில் சிவன் கோயில்கள் காணப்படுகின்றன. கன்னியா, வெடுக்குநாறி, கீரிமலை போன்ற கோயில்களே தமிழ்ப் பெயரிலே காணப்படுகின்றன. முல்லைத்தீவிலும் வன்னியிலும் மன்னாரிலும் சைவத்தமிழர்கள் பல்வேறு விதமாக தொடர்ந்தும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

திருநீறு பூசுவதையும் நடராஜர் சிலை வைப்பதையும் பற்றி பேசும் நாக்கள் இந்த விடயங்களில் கரிசனை கொள்வதில்லை. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுக்கப்பட வேண்டும். இந்த நிலையிலே நாம் போராட்டத்தை மேற்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளோம்‘‘ என்றார்

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US