வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் பலி
வவுனியா - பூவரசங்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று(27.09.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குருக்கள்புதுக்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய செல்வகுமார் சர்மிளன் என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம்
வவுனியா, குருக்கள்புதுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 10 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam