வவுனியா ஆடைத்தொழிற்சாலை தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் மேலும் 10 பேருக்கு இன்றிரவு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆடை தொழிற்சாலை கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வடைந்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 24 பேர் கடந்த இரு வாரங்களில் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் 1800 பேரில் 800 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடமும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பி.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (16.03) வெளியாகிய நிலையில் ஆடைத்தொழிற்சாலையைச் சேர்ந்த 2 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒரு தொகுதி முடிவுகள் இன்று (17.03) இரவு வெளியாகிய நிலையில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 36 பேர் தற்போது கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri

ரேனிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள் Cineulagam
