வவுனியாவில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் போதை மாத்திரைகள் மீட்பு: வைத்தியர் அரங்கன்
வவுனியாவில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி அரங்கன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனை தொடர்பில் நேற்று (14.01.2023) கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வவுனியாவில் போதைப் பாவனை அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்திலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
மதுபான பாவனையை விட இன்று மிகவும் மோசமாக வேறு விதமான போதைப்பொருள் பாவனை சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடத்தில் அதிகரித்துச் செல்கின்றது.
வலி நிவாரணி மாத்திரைகள் கூட அதிக விலைக்கு பெற்று போதைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
வவுனியா நகரப் பகுதியில் கடந்த காலங்களில் அவ்வாறான மாத்திரைகள் மீட்கப்பட்டன.
வவுனியாவின் நெளுக்குளம், கூமாங்குளம், செக்கட்டிப்புலவு உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளிலும் போதை மாத்திரைகளுடன் சில இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் கவனம்
எனவே பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.
பெற்றோர் தமது பிள்ளைகளின் நடத்தைகள், அவர்களின் நண்பர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் அளவுக்கு அதிகமாக பிள்ளைகளிடம் பணம் வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.
வீட்டில் சமைத்த உணவுகளை பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கொடுத்து விடுங்கள்.
பெற்றோருடைய ஒத்துழைப்பு
போதைப்பொருள் பாவனையை சுகாதாரத் துறையினரும், பொலிஸாரும் இணைந்து மட்டும் கட்டுப்படுத்த முடியாது. பெற்றோருடைய ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.
எனவே பெற்றோர் மட்டுமன்றி சமூகமட்ட அமைப்புக்கள், பாடசாலைகள் என அனைவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
