உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக வவுனியாவில் செலுத்தப்பட்டுள்ள கட்டுபணம் தொடர்பான தகவல் (photos)
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியாவில் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்ளடங்களாக 82 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை நேற்று (20.01.2023) எமது பிராந்திய செய்தியாளரிடம் மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதி கட்டத்தை அடையும் நிலையில், வவுனியா மாவட்டத்தில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் உள்ளடங்களாக 82 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள்
வவுனியா மாவட்டத்தில் ஒரு வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை என 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன.
அதில் சில உள்ளூராட்சி மன்றங்களில் மட்டும் போட்டியிடுவதற்கு சில கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
வேட்புமனுத் தாக்கல்
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் முழுமையாக 78 கட்டுப்பணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஒரு கட்சி வேட்புமனுத் தாக்கலையும் இதுவரை செய்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா மாநகர சபையில் போட்டியிடுவதற்கே அதிகளவிலான கட்டுப்பணங்கள்
செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
