வவுனியாவில் 35 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி
வவுனியா மாவட்டத்தில் பரவலாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் ஶ்ரீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் மாவட்டம் தழுவிய ரீதியில் 50பேர் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகபட்சமாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும், செட்டிகுளம் பிரிவில்5 பேரும் ஏனைய பிரிவுகளில் தலா ஐவருமாக 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் 35 பேருக்கு டெல்டா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின.
அதில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, டெல்டா வைரஸ் தொற்று பரவல் அடைவதால் மக்கள் விழிப்புணர்வுடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.