நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
வட்டுக்கோட்டை
வட்டுக்கோட்டை பகுதியில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் பல திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு பகுதியில் தலைமறைவாகி இருந்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா
“குடு”போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் போதைபொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட பொலிஸார் அங்கு 10 கிராம் “குடு”போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேபகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும் 26 வயதுடைய ஆண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி
ஏ.எஸ்.ஜெயக்கொடியின் வழகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர்களான மதுசங்க மற்றும்
நிஷன்சலா மற்றும் பொலிஸ் சார்ஜன்களான 14692 ஹேரத், மஞ்சுலா 36561 , பொலிஸ்
கொஸ்தாபல்களான 46353 விதானகே, ஜமிந்த 82175 ,மிதுசன் 91800 , பெண் பொலிஸ்
கொஸ்தாபல் 10706 ஜதுனி ஆகியோரை உள்ளடக்கிடய பொலிஸ் குழுவினரால்
முன்னெடுக்கப்பட்டது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
