மாவீரர் தின நாட்களில் மாத்திரம் திறம்பட செயல்படும் புலனாய்வுப் பிரிவினர்: சாணக்கியன் சீற்றம்
மாவீரர் தின நாட்களில் திறம்பட செயல்படும் புலனாய்வுப் பிரிவினர் சட்ட விரோத மதுபான பிரச்சினையில் திணறுவது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
வவுணதீவு மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இன்றைய தினம் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சட்ட விரோத மதுபான பிரச்சினை மட்டக்களப்பில் பரவலாக பல இடங்களில் காணப்படுகின்றது. இருப்பினும் புலனாய்வுப் பிரிவினர் வருடத்துக்கு ஒரு முறை மக்களுக்காக உயிர் நீர்த்த தத்தம் உறவுகளை நினைவு கூறி அஞ்சலி செய்யும் நாட்களில் நடக்கும் சம்பவங்களை மாத்திரம் புலனாய்வு செய்து கைதுகளை மேற்கொள்கின்றனர்.
அதில் கேக் கொடுத்தவர் வெட்டியவர் போன்றோரை கூட கைது செய்தார்கள்.
ஆனால் வருடம் முழுவதும் ஒவ்வெரு நாளும் நடக்கும் சட்ட விரோத மதுபான பிரச்சினைக்கு மாத்திரம் முற்றுப் புள்ளி வைக்க முடியவில்லை. அதற்கான காரணம் என்ன” என கேளவியெழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan