தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் நெஞ்சை கனமாக்கும் சம்பவம்: பாடசாலை அதிபர் ஒருவரின் மோசமான செயல்
தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், ஊடகவியலாளருமான, திருமலை நவம் தாக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், திருமலை நவம் தாக்கப்பட்ட சம்பவத்தை நான் நேரில் பார்த்தேன். அதை இப்போது விவரித்தாலும் நெஞ்சம் கனமாக உள்ளது.
மேலும், அவரை 40 வயது மதிக்கத்தக்க ஒரு பாடசாலை அதிபரே தாக்கினார். தொடர்ந்து நாங்கள் அதை தடுத்தோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அத்தோடு, தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தான் தாக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தரும் ஊடகவியலாளருமான திருமலை நவம் பொலிஸ் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
தானும் கட்சியின் மற்றொரு பொதுக்குழு உறுப்பினரான தர்சன் என்பவரும் கட்சியின் செயலாளராக குகதாசன் நியமிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்த போது, அவரின் ஆதரவாளர்கள் தங்கள் இருவரையும் தாக்கியதாக திருமலை நவம் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்புகளுக்கும் இடையிலும் கொதிநிலை! தமிழரசுக் கட்சியின் தெரிவு குறித்து சிறீதரன் வெளியிட்ட கருத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
