இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் சுற்றுலா பயணிகளால் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான வற் வரியை திரும்ப பெறுவதற்காக, VAT Refund கவுண்டர் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வருவாய் திணைக்களத்தால் கட்டுநாயக்க விமான விமான நிலைய வளாகத்தில் நிறுவப்பட்ட VAT Refund கவுண்டர், அமைச்சர்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் அனில் ஜெயந்த ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
50,000 ரூபாவுக்கும் அதிகமான வற் வரி செலுத்தி, 90 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், அவர்கள் செலுத்திய வற் வரித்தொகையை பணமாக பெற்றுக்கொள்ள முடியும்.
சுற்றுலாப் பயணிகள்
இலங்கை பொருட்களை கொள்வனவு செய்ய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்கும் இலங்கையில் வரி வருமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் இந்த சேவை முன்னெடுக்கப்படுகிறது.

இந்த செயல்முறை குறித்து வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாத் துறையினருக்கு விளக்கமளிக்கும் ஊடக மாநாடு விரைவில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam