நாங்கள் உருவாக்கிய அரசாங்கம் எங்களை விமர்சிக்கின்றது - வாசுதேவ நாணயக்கார
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான தற்போதைய கூட்டணி அரசாங்கத்திற்குள் சிறிய கட்சிகள் சில பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் பசில் ராஜபக்சவின் நிலைப்பாடு என்ன என்பது எனக்கு தெரியாது.
எரிபொருள் குறைந்த விலையில் வழங்கலாம் என பசில் அறிந்திருந்தால், அதன் விலையை அதிகரிக்க வேண்டும் என்று தீர்மானித்த குழுவுக்கு பசிலுக்கும் இடையில் கலந்துரையாடல் நடந்திருக்க வேண்டும்.
நாங்கள் உருவாக்கிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகள் சிறிய கட்சிகள் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றன. இதில் ஒன்றுதான் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான குற்றசாட்டு.
மிகவும் நஸ்டத்தில் இயங்கிய நிலையில் வருவாய் ஈட்டும் நிலைமைக்கு கொண்டு வரப்பட்ட பேசுபேட் துறை அமைச்சர் விமல் வீரவங்சவின் துறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்தில் உள்ள சிறிய கட்சிகளுக்கு மன வருதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.