கல்முனை மேலதிக மாவட்ட பதிவாளரிற்கு இடமாற்றம்

Batticaloa Sri Lankan political crisis Eastern Province
By Independent Writer Nov 16, 2023 11:07 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

கல்முனை மேலதிக மாவட்ட பதிவாளர் பைறுஸ் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

கல்முனை காணிப்பதிவகத்தில் கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையாற்றி வந்த அட்டாளைச்சேனை பன்மூலை பகுதியை சேர்ந்த பைறுஸ் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு கடந்த 01-11-2023ம் திகதி முதல் கிழக்கு மாகாண உதவி பதிவாளர் நாயகத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்க தாபனக் கோவை சட்டத்திற்கு முரணாகவும் 5 வருடங்களைக் கடந்தும் 8 வருடங்களுக்கும் அதிகமாக எவ்விதமான இடமாற்றமும் இல்லாது கல்முனை காணிப் பதிவகத்தில் தொடர்ச்சியாக அவர் கடமையாற்றுவது என்பது அரசாங்க சுற்று நிருபத்திற்கு விரோதமானதாகும்.

மேலும், அரசாங்க தாபனக் கோவை சட்டத்திற்கு முரணாகவும் உள்ளதனால் அவரை கல்முனை காணிப்பதிவகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி,பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் பதிவாளர் நாயகம் ஆகியோருக்கு ஏற்கனவே பல கடிதங்கள் அனுப்பப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய காணிப்பதிவாளர் நியமனம்

இதேவேளை கல்முனை காணிப்பதிவாளர் தொடர் வைத்திய விடுமுறையில் சென்றுள்ளதனால் தற்போது கல்முனை காணிப் பதிவகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக புதிதாக ஒருவரை நியமிப்பதற்கான மேலதிக ஒழுங்குகளை பத்தரமுல்லை பதிவாளர் நாயகம் அலுவலகம் மேற்கொண்டு வருவதாக அறியப்படுகின்றது.

கல்முனை மேலதிக மாவட்ட பதிவாளரிற்கு இடமாற்றம் | Various Complaints Against Divisional Secretary

இந்நிலையில் குறித்த மாவட்ட பதிவாளர் 8 வருடகால காணிப் பதிவாளர் அலுவலக அனுபவம் பெற்றிருந்தாலும் அவர் மீது பலவகையான முறைப்பாடுகள் பதிவாளர் நாயகத்திற்கு கிடைத்துள்ளதான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய பதிவாளராக நியமிக்க முடியாத துர்பாக்கிய நிலை தோன்றியுள்ளதாக மேலும் அந்த அதிகாரி கூறியுள்ளார். 

தமிழ் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்

கல்முனை காணிப் பதிவகத்தைப் பொறுத்த மட்டில் 2 மேலதிக மாவட்ட பதிவாளர்கள் கடமையாற்றி வந்த போதிலும் அங்கு தமிழர் ஒருவர் மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையாற்றி வந்துள்ளார்.

குறித்த பதிவாளரும் கல்முனை காணிப் பதிவகத்திலிருந்து சென்றுள்ள நிலையில் அங்கு தமிழர் ஒருவரின் வெற்றிடம் உள்ளது என்றும், அங்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் மக்களின் கோரிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆம். நாடு முழுவதும் மேலதிக மாவட்ட பதிவாளர் பதவி வெற்றிடங்கள் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் பிரதேச செயலாளர் செயலங்களில் மேலதிக மாவட்ட பதிவாளர் பதவி வெற்றிடமாக உள்ளதனால் அங்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களை பதில் கடமையாக மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையாற்றுமாறு பதிவாளர் நாயகம் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் செய்துள்ளார்.

கல்முனை மேலதிக மாவட்ட பதிவாளரிற்கு இடமாற்றம் | Various Complaints Against Divisional Secretary

மேலதிக மாவட்ட பதிவாளர் பதவி மிகவும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அரசாங்கம் தற்போதய நெருக்கடி நிலையில் மேலதிக மாவட்ட பதிவாளர் பதவி குறித்தான நியமனம் செய்யும் நிலையில் இல்லை.

அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் மேலதிக மாவட்ட பதிவாளர் பதவி வெற்றிடமாகவுள்ளதான தகவல்கள் வெளிவருகிறது.

கல்முனை காணிப்திவகத்தில் மாவட்ட மேலதிக பதிவாளராக தமிழர் ஒருவரை நியமிக்கத் தேவையான நடவடிக்கைளை செய்து தருமாறு ஊடகவியலாளர்கள் சிலர் கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகத்துடன் கோரிக்கை குறித்து பேசி விரைவில் தமிழ் மேலதிக மாவட்ட பதிவாளர் ஒருவரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொறுப்பு வாய்ந்த பதவியாக காணிப்பதிவாளர் பதவியை அடையும் ஒருவர் எல்லோரையும் அனுசரித்து நடக்க வேண்டும் என்பதுடன் அவருக்கு எதிராக பதிவாளர் நாயகத்துக்கு எந்தவொரு முறைப்பாடும் செல்லாமல் அவரது பணி அமைய வேண்டும் என மக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2 வாரங்களாக கல்முனை காணிப்பதிவகத்தில் நிரந்தர பதிவாளர் ஒருவர் இன்னும் நியமனம் செய்யப்படாமல் உள்ள நிலையில் 3 அதிகாரிகள் கடமையாற்றிய காரியாலயத்தில் அங்கு மேலதிக பதிவாளராக கடமையாற்றும் உத்தியோகத்தர் மாத்திரம் தனியாளாக பல சிரமங்களின் மத்தியில் கடமையாற்றி வருகின்றார்.

இதற்கு முன்னர் கல்முனை பிரதேச செயலக விடயமாக கல்முனையில் இரண்டு இனங்கள் இடையே கசப்பாக இருந்து வரும் நிலையில் கல்முனை காணிப்பதிவகத்தில் தமிழ் அதிகாரி ஒருவர் இல்லாமல் தனியாக முஸ்லிம் அதிகாரிகள் மாத்திரம் கடையாற்றி வந்தால் மேலும் இந்தப் பகுதியில் இனக்கசப்பு ஏற்பட மிக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை அடுத்த வாரம் கல்முனை காணிப் பதிவகத்திக்கு நிரந்தர பதிவாளராக ஒருவரை நியமிக்கத் தேவையான நடவடிக்கைளை பதிவாளர் நாயகம் திணைக்களம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US