இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு
கேகாலை - வரக்காபொல பகுதியில் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகம, நவக்குளம கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மெலனி நிசன்சலா சந்திரபால என்ற இரண்டு பிள்ளைகளின் தாயான ரத்நாயக்க முதியன்செல என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும், அவரது கணவர் சட்டப்பூர்வமாக அவரை பிரிந்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறுதிக்கிரியைகள்
2019 ஆம் ஆண்டு முதல் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்திபுர பிரதேசத்தில் உள்ள துறவு இல்லம் ஒன்றிற்கு ஜாதகம் பார்ப்பதற்கு குறித்த பெண் வந்து செல்லும் நிலையில், அங்கு திடீரென உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை கேகாலை பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நேற்று (11) நாவக்குளம் பொது மயானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan