முற்றுகையிடப்பட்ட அரச மாளிகைகள்! 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்
கொழும்பில் நடந்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு இடையில் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படுத்தி, அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டமை சம்பந்தமாக சுமார் 70 பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீவைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களும் அதில் அடங்குகின்றனர்.
நேரடி காணொளி காட்சிகளை சமூக வலைத்தளங்கள் வழியாக காண்பித்து மக்களை தூண்டிய நபர்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் கட்சிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசுக்கு சொந்தமான ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் என்பன சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



