இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வான் பபுல் உடன்படிக்கை
இந்தியாவும், இலங்கையும் வான் பபுல் உடன்பாடு ஒன்றை இறுதி செய்துள்ளதாக இந்திய பொது வானூர்தித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த உடன்படிக்கையின் கீழ் தகுதியுள்ள பயணிகள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் விரைவில் பயணங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று இந்திய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கையின் படி இரண்டு நாடுகளுக்கும் இடையில் விசேட விமானங்கள் கடும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் சேவைகளை நடத்தவுள்ளன.
ஏற்கனவே இது தொடர்பான ஆரம்ப பேச்சுக்கள் இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.