வல்வைப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)
வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 63 தமிழர்களின் 33ஆவது வருட நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வல்வெட்டித்துறை அமைப்பின் எற்பாட்டில், வல்வெட்டித்துறை ரேவடி கடற்பரப்பில் இந்த நினைவேந்தல் நேற்று(2) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட 63 தமிழ்களுக்கான முதல் ஈகை சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் எற்றி வைத்துள்ளார்.


நினைவேந்தல் அனுஷ்டிப்பு
இதனை தொடர்ந்து ஏனைய பிரதிநிதிகளும் மலர் அஞ்சலி செலுத்தி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


மேலதிக செய்தி- தீபன்
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri