டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம்(18.07.2023) அமெரிக்க டொலரின் 'ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்' 322.80 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 04, ஆம் திகதிக்கு பின்னர் பதிவான, அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி இதுவாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையிலும் நேற்று (18.07.2023) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாணய மாற்று விகிதம்
அதன்படி, இலங்கை மத்திய வங்கி நேற்று வௌியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 314.95 ரூபாவாகவும் விற்பனை விலை 328.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் (17.07.2023) டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 313.29 மற்றும் 327.16 ரூபாவாக பதிவாகியிருந்தன.
இதற்கமைய நேற்று (18) அமெரிக்க டொலரின் 'ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்' 322.80 ரூபாய் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் 319.12 ரூபாவாக ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri