டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம்(18.07.2023) அமெரிக்க டொலரின் 'ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்' 322.80 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 04, ஆம் திகதிக்கு பின்னர் பதிவான, அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி இதுவாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையிலும் நேற்று (18.07.2023) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாணய மாற்று விகிதம்
அதன்படி, இலங்கை மத்திய வங்கி நேற்று வௌியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 314.95 ரூபாவாகவும் விற்பனை விலை 328.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் (17.07.2023) டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 313.29 மற்றும் 327.16 ரூபாவாக பதிவாகியிருந்தன.
இதற்கமைய நேற்று (18) அமெரிக்க டொலரின் 'ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்' 322.80 ரூபாய் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் 319.12 ரூபாவாக ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
