அடுத்த தேர்தலில் ரணில் 100 இலட்சம் வாக்குகளை பெறுவார்! வஜிர அபேவர்தன
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஹிகுரக்கொட பிரதேசத்தில் நேற்றைய தினம் (30.07.2023) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், ஜனாதிபதி 100 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் தமக்கு கிடையாது.
நாட்டின் வங்குரோத்து நிலை
நாடு வங்குரோத்து அடைந்து விட்டதாக பலர் குறிப்பிட்ட போதிலும் ரணில் விக்ரமசிங்க நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு எடுத்து வருகிறார்.
இன்னும் ஒரு மாத காலப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக நாட்டை மீட்க முடியும். சிலர் தேர்தல் நடத்தவில்லையா என கேள்வி எழுப்புகின்றனர். தேர்தல் நடத்தியதனால் தான் மக்கள் வீதியில் வரிசையில் காத்திருக்க நேரிட்டது.

எனினும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று வரலாற்று ரீதியான வெற்றியை ஈட்டுவார் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam