இன்று ஆரம்பமாகவுள்ள வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க யாழ். (Jaffna) வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய
வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை 9 மணிக்கு
நடைபெறவுள்ளது.
இதன்படி, காலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து சுவாமி தேர் உலா இடம்பெறவுள்ளது.
அதேவேளை, சமுத்திர தீர்த்தத் திருவிழா நாளை மாலை 5 மணிக்கு கற்கோவளம் வங்கக் கடலில் நடைபெறும்.
போக்குவரத்துச் சேவைகள்
இதற்கான வசந்த மண்டபப் பூஜை மாலை 4 மணிக்கு நடைபெற்று தீர்த்தமாடுவதற்குச் சுவாமி 5 மணிக்கு வங்கக்கடல் நோக்கி கொண்டு செல்லப்படும்.

மேலும், மறுநாள் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆலய வளாகத்திலுள்ள கேணியில் பட்டுத் தீர்த்தம் நடைபெற்று இறுதியாக அன்றைய தினம் மாலை 5 மணிக்குக் கொடியிறக்கம் இடம்பெறுவதுடன் மஹோற்சவம் நிறைவுறும்.
இந்நிலையில் தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு பக்தர்களின் வசதி கருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் ஆலய சுற்றாடலிலுள்ள அன்னதான மடங்களில் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |