உலக சுகாதார அமைப்பின் "கோவாக்ஸ்" வசதி மூலம் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்ப்பு
உலக சுகாதார அமைப்பின் "கோவாக்ஸ்" வசதி மூலம் அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு மிகவும் தேவையான எஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளில் 264,000 குப்பிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தமது அதிகாரபூர்வ கடிதத்தில் இலங்கையின் சுகாதார அமைச்சகத்திற்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் ஜூலை ஆரம்பத்தில் இலங்கைக்கு அந்த மருந்துகள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 6 இலட்சம் பேர் முதல் அளவை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு இரண்டாம் அளவை செலுத்த வேண்டியுள்ளது.
இதன்படி இலங்கைக்குக் கிடைக்கவுள்ள 264,000 குப்பிகளுக்கு மேலதிகமாக 336,000 குப்பிகள் தேவைப்படுகின்றன.
ஏற்கனவே 1 மில்லியன் குப்பி ஃபைசர் தடுப்பூசிகளை இலங்கையின் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கோரியுள்ளது.
அத்துடன் அதனை எஸ்ட்ரா செனேகாவுக்கு பதிலாகப் பயன்படுத்தக்கூடிய ஏதுநிலை குறித்து ஆராயப்படுகிறது.
இந்த கலவையைப் பரிந்துரைக்கும் சில
முடிவுகள் இருப்பதாக உலக சுகாதார மையம் சமீபத்தில் கூறிய பின்னர், எஸ்ட்ரா
செனெகா தடுப்பூசிகளை இரண்டாவது அளவாகப் பெற வேண்டிய வேண்டியவர்களுக்கு இது
பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 6 மணி நேரம் முன்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
