வவுனியாவில் 8 நிலையங்கள் ஊடாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கல்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நிலையங்கள் ஊடாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கல் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நிலையங்கள் ஊடாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது.
வவுனியா சுகாதாரப்பிரினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து காலை 9 மணியில் இருந்து 3 மணிவரை தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்குவதற்காக 81 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் வவுனியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு நிலையங்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதன்படி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வைத்தியர் பிரசன்னா தலைமையில் தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட 473 பேருக்கு இரண்டாவது டோஸ் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.











