வவுனியா வடக்கில் தடுப்பூசி அட்டைகள் பரிசீலனை
வவுனியா - நெடுங்கேணி பகுதியில் இன்றையதினம் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் தலைமையில் , வவுனியா சுகாதார வைத்திய பணிமனையினர், நெடுங்கேணி பொலிஸாருடன் இணைந்து நெடுங்கேணி நகரில் மக்களின் தடுப்பூசி செலுத்திய அட்டைகளைப் பரிசோதனை செய்துள்ளனர்.
குறித்த தரப்பினரின் பரிசோதனை நடவடிக்கையில் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் கோவிட்- 19 நோய்க்கான ஆபத்தைக் கூடுதலாகக் கொண்டிருப்பவர்கள் என அடையாளப்படுத்தி (high risk for Covid 19 disease) அவர்களுக்கும்,
நெடுங்கேணி நகர வர்த்தக நிலைய ஊழியர்களிற்கும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.







பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
