வவுனியா வடக்கில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 5 இடங்களில் தடுப்பூசி மையங்கள்
வவுனியா வடக்கில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 5 மையங்கள் ஊடாக தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாளை (22.09) மற்றும் நாளை மறுதினம் (23.09) குறித்த இடங்களில் 19 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் வருகை தந்து கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதன்படி, கனகராயன்குளம் வைத்தியசாலை, புளியங்குளம் வைத்தியசாலை, நைனாமடு வைத்தியசாலை, நெடுங்கேணி வைத்தியசாலை, ஓலுமடு பாடசாலை என்பவற்றில் சுகாதார நடைமுறைகளுடன் வருகை தந்து தடுப்பூசிகளைப் பெற முடியும் எனவும் சுகாதாரப்பிரிவிகன் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை சுகாதாரப்பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.
அதற்கமைவாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்பட்டது. இதில் பலரும் ஆர்வத்துடன் வருகை தந்து சுகாதார நடைமுறைகளைபர் பின்பற்றி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டனர்.