அமெரிக்காவின் அதிரடி முடிவு! மத்திய கிழக்கிலிருந்து வெளியேறிய ராட்சத கப்பல்
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்ற பின்னர் USS Gerald R. Ford விமானத் தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கை விட்டு வெளியேறியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அந்தப் பகுதியில் தற்போது இரண்டு பெரிய அமெரிக்க போர் கப்பல்கள் மட்டும் நிலைத்துள்ளன.
ராட்சத கப்பல்
அந்த அதிகாரியின் தகவலின்படி, தற்போது Ford கப்பல் அமெரிக்காவின் ஐரோப்பிய கட்டளை பகுதி (European Command area)யில் உள்ளது.
மத்திய கிழக்கில் இன்னும் இருக்கும் அமெரிக்க கடற்படை கப்பல்களின் எண்ணிக்கை சுமார் 20 எனவும், அவற்றில் USS Abraham Lincoln மற்றும் USS George H.W. Bush போன்ற விமானத் தாங்கிக் கப்பல்கள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ford கப்பல் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கடலில் பணியில் உள்ளது. இந்த நீண்ட பயணத்தில் அது, கரீபியன் பகுதியில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றது சந்தேகமான போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தடையிடப்பட்ட எண்ணெய் கப்பல்களை தடுக்கப்பட்டது வெனிசுவேலா தலைவர் நிக்கோலாஸ் மதுரோ தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. மேலும், மார்ச் 12 அன்று இந்த கப்பலின் துணி துவைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஹோர்முஸ் நீரிணை
இதில் இரண்டு கடற்படை வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் சுமார் 100 படுக்கைகள் சேதமடைந்தன. அதோடு, கப்பலின் கழிப்பறை அமைப்பில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், அடைப்பு மற்றும் நீண்ட வரிசைகள் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முறைப்படுத்தப்படாத (open-ended) போர் நிறுத்த நிலை உள்ளது. ஆனால் மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையில் ஈரான் முக்கியமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியை தடுப்பதாகவும், அமெரிக்க படைகள் ஈரான் துறைமுகங்களை கண்காணிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளது.