அமெரிக்க வீராிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தையை காணவில்லை
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குழப்பத்தின்போது காபூல் விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறினர்.
இந்தநிலையில் 2021, ஆகஸ்ட் 19 ந் திகதி காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்காக நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் முயற்சித்தனர்.
இதன்போது, பெற்றோா் ஒரு குழந்தையை அமெரிக்க பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைக்கும் காணொளி சமூகவலைதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
எனினும் அந்த குழந்தை இதுவரை பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் குழந்தையை தொடர்ந்து தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தக்குழந்தையின் பெற்றோா் தற்போது, அமாிக்க டெக்சாஸில் ஆப்கானிய அகதிகளுடன் தங்கி உள்ளனர்.
10 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரகத்தில் காவலாளியாக பணிபுரிந்த ஒருவரின் குழந்தையே இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது.