ஈரான் - இஸ்ரேல் மோதல் நிலை: மத்தியகிழக்கிற்கு விரையும் அமெரிக்க துருப்புக்கள்
காசா மற்றும் லெபனானில் உள்ள மோதல்களைத் தீர்ப்பதில் முன்னேற்றம் காண இராணுவம் உள்ளிட்ட அமெரிக்காவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் குழு மத்திய கிழக்கு நோக்கிச் செல்லவுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனான், காசா, ஈரான், பணயக்கைதிகள் மற்றும் பிற பிராந்திய விவகாரங்கள் பற்றி விவாதிக்க குறித்த குழுவின் விஜயம் அமையும் என கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பகைமையை நிறுத்த அமெரிக்க மத்தியஸ்தர்கள் இராஜதந்திர ரீதியில் பணியாற்றி வருவதாக பெண்டகனின் செய்தியில் கூறப்படுகிறது.
அமெரிக்க மத்திய புலனாய்வு
மேலும், இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் ஆராய அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரியான பில் பர்ன்ஸ்(Bill Burns) எகிப்துக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாத ஆரம்பத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.
இதன் விளைவாக இஸ்ரேலும் தனது பதிலடி தாக்குதலை மேற்கொண்டது.
இந்நிலையில் இருதரப்பு மோதல் வலுப்பெறுவதை தவிர்க்கவே சர்வதேச ரீதியிலான உயர்மட்ட பயணங்கள் மத்தியகிழக்கி நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
