ஈரான் - இஸ்ரேல் மோதல் நிலை: மத்தியகிழக்கிற்கு விரையும் அமெரிக்க துருப்புக்கள்
காசா மற்றும் லெபனானில் உள்ள மோதல்களைத் தீர்ப்பதில் முன்னேற்றம் காண இராணுவம் உள்ளிட்ட அமெரிக்காவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் குழு மத்திய கிழக்கு நோக்கிச் செல்லவுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனான், காசா, ஈரான், பணயக்கைதிகள் மற்றும் பிற பிராந்திய விவகாரங்கள் பற்றி விவாதிக்க குறித்த குழுவின் விஜயம் அமையும் என கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பகைமையை நிறுத்த அமெரிக்க மத்தியஸ்தர்கள் இராஜதந்திர ரீதியில் பணியாற்றி வருவதாக பெண்டகனின் செய்தியில் கூறப்படுகிறது.
அமெரிக்க மத்திய புலனாய்வு
மேலும், இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் ஆராய அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரியான பில் பர்ன்ஸ்(Bill Burns) எகிப்துக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாத ஆரம்பத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.
இதன் விளைவாக இஸ்ரேலும் தனது பதிலடி தாக்குதலை மேற்கொண்டது.
இந்நிலையில் இருதரப்பு மோதல் வலுப்பெறுவதை தவிர்க்கவே சர்வதேச ரீதியிலான உயர்மட்ட பயணங்கள் மத்தியகிழக்கி நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri