கிம் ஜொங் தாக்குதல் நடத்தும் அபாயம்! ட்ரம்பின் நடவடிக்கையால் தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
அமெரிக்கா, தனது ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பின் சில பகுதிகளை தென் கொரியாவிலிருந்து மத்திய கிழக்குக்கு மாற்றியமைத்துள்ள நிலையில், அதற்கு தென் கொரியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா தனது Terminal High Altitude Area Defence (THAAD) எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பின் சில பகுதிகளையும், பிற இராணுவ உபகரணங்களையும் தென் கொரியாவிலிருந்து மத்திய கிழக்கிற்கு மாற்றியுள்ளது.
வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக தென் கொரியாவில் சுமார் 28,500 அமெரிக்க படையினர் மற்றும் பல்வேறு வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
திரும்ப பெறப்பட்ட அமெரிக்க படை
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு, Seongju என்ற தென் கொரிய கிராமத்தில் THAAD ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டது.

அப்போது அந்த கிராமம், வட கொரியாவின் ஏவுகணை தாக்குதல்களுக்கு எதிரான முக்கிய பாதுகாப்பு மையமாக மாற்றப்பட்டது.
இவ்வமைப்பு தென் கொரியாவை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்டிருந்தாலும், அதன் ரேடார் அமைப்பு சீனா மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பை பாதிக்கக்கூடும் என அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது, அமெரிக்கா இந்த பாதுகாப்பு அமைப்பின் சில பகுதிகளை மாற்றியமைத்துள்ளதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவின் பாதுகாப்பு குறித்து அளித்த உறுதிப்பாடுகள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியூங், அமெரிக்க ஆயுதங்களை இவ்வாறு திரும்பப் பெறுவது குறித்து கவலை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாற்றம் நாட்டின் பாதுகாப்புத் திறனை குறைக்கும் அபாயம் உள்ளதாக தென் கொரிய செய்தித்தாள் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், “மாற்றியமைக்கப்பட்ட இந்த பாதுகாப்பு அமைப்புகள் தங்களது பணியை நிறைவு செய்ததும் விரைவாக மீண்டும் தென் கொரியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
அதேசமயம், வட கொரியாவை எதிர்கொள்ள நாட்டின் சொந்த பாதுகாப்புத் திறன்களையும் விரைவாக வலுப்படுத்த வேண்டும்” என அந்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
தீவிர தயார்நிலை..
இதுகுறித்து இராணுவ ஆய்வாளர் மற்றும் தென்கொரியாவின் Sangji பல்கலைக்கழக பேராசிரியர் Choi Gi-il கூறுகையில், “இந்த ஆயுதங்களை மாற்றியமைத்ததை வட கொரியா தவறாக புரிந்து கொண்டு, கூட்டணி நாடுகளின் பாதுகாப்பு நிலையை சோதிக்கும் வகையில் சிறிய அளவிலான தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அபாயம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன், கடந்த பெப்ரவரி மாதம் தனது நாட்டின் அணு ஆயுத களஞ்சியத்தை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
மேலும், தென் கொரியாவை “மிகவும் பகைமை கொண்ட எதிரி” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, சமீபத்தில் ஒரு கடற்படை அழிப்பு கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை அவர் கண்காணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த மாற்றம் தென் கொரியாவின் எதிரிகளைத் தடுக்கின்ற பாதுகாப்புத் திறனை பாதிக்காது என ஜனாதிபதி லீ ஜே மியூங் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஈரானியர்களுக்கு இன்று காத்திருக்கும் பெரும் ஆபத்து! அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam