அமெரிக்கா இஸ்ரேலுக்கு அவசர அவசரமாக அனுப்பிவைக்கும் அழிவின் ஆயுதங்கள்
இஸ்ரேலுக்கு பெரும் தொகுதி ஆயுதங்களை வழங்குவதான அவசர அறிவுப்பு ஒன்றை கடந்த வாரம் அறிவித்திருந்தது அமெரிக்கா.
ஒரு பில்லியன் யு.எஸ் டொலர்ஸ் பெறுமதியான ஆயுதங்கள்.
அதுவும் -காசாவின் ரப்பா மீது இஸ்ரேல் படைநடவடிக்கையை அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கான ஆயத உதவியை நிறுத்திவைப்பதாக ஜோ.பைடன் அறிவித்தல் விடுத்து வெறும் இரண்டே நாட்களில், இந்த புதிய ஆயுத உதவி பற்றிய அறிவிப்பு வெளியாகியிருந்தது.
ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் இஸ்ரேலுக்கு 26 பில்லியன் யு.எஸ் டொலர்ஸ் பெறுமதியான உதவிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிகமாக இந்த ஒரு பில்லியன் டொலர்ஸ் ஆயுத வினியோகம் தற்பொழுது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- எதற்காக இந்தனை ஆயுதங்களை அவசர அவசரமாக இஸ்ரேலுக்கு அனுப்புகின்றது அமெரிக்கா?
- அமெரிக்காவின் இந்த ஒரு பில்லியன் ஆயுத உதவி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, எதற்காக இஸ்ரேலுக்கான ஆயுத வினியோகத்தை நிறுத்துவதாக அறிவித்திருந்தது அமெரிக்கா?
- மிகப் பெரிய நிதி நெருக்கடியில் இருக்கின்ற அமெரிக்கா எதற்காகப் பாரிய நிதி ஒதுக்கீடுகளை இஸ்ரேலுக்கு செய்துவருகின்றது?
- இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்