இலங்கையுடனான நல்லிணக்க விடயத்தில் முழுமையான ஆதரவினை வழங்க அமெரிக்கா தீர்மானம்
நல்லிணக்க விடயத்தில் இலங்கையுடன் முழுமையாக ஈடுபாடு கொள்ளப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து வெளியேறும் அமெரிக்க தூதர் எலைய்னா பி. டெப்லிட்ஸ், இதனை குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது பங்காளிகளுடனும், குறிப்பாக அவர்களின் ஜனநாயக பங்காளிகளுடனும் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நம்புகிறது என்று கூறினார்.
கடந்த கால மற்றும் நிகழ்கால மனித உரிமைகள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். கடந்த கால மற்றும் நிகழ்கால அநீதிகளை கையாள வேண்டும்.
அமெரிக்காவின் பார்வையில், அனைத்து மக்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய ஒரு ஜனநாயக அரசாங்கம் உண்மையாகவும் நம்பகத்தன்மையுடனும் குற்றவியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் தீர்ப்பளிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும் அமெரிக்க தூதர் எலைய்னா பி. டெப்லிட்ஸ், தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை: பிரித்தானியா மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan