ஈரானியர்களுக்கு இன்று காத்திருக்கும் பெரும் ஆபத்து! அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
ஈரானியர்களுக்கு இன்று என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு புதிய அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றினையிட்டு இவ்வாறு எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா திட்டம்
ஈரானின் கடற்படை போய்விட்டது. அவர்களின் விமானப்படையும் இனி இல்லை. ஏவுகணைகள், ட்ரோன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. மேலும் அவர்களின் தலைவர்கள் பூமியிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் அவர்கள் 47 வருடங்களாக அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். இப்போது நான் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக அவர்களைக் கொன்று வருகின்றேன் என பதிவிட்டுள்ளார்.
ஈரான் உடனான போரில் அமெரிக்கா வெற்றி பெறவில்லை என செய்தி வெளியிடும் சில ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.
இதனால், ஈரான் மீது மேலும் அபாயகரமான தாக்குதல்களை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam