இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்! உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இறுதி முடிவு அமெரிக்காவின் கைகளில்..
லெபனான் முழுவதும் இன்று நடைபெற்ற தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா போர் நிறுத்தம் அல்லது "இஸ்ரேல் வழியாக" போரைத் தொடர்வது ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டு வார கால போர் நிறுத்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நிபந்தனைகள் "தெளிவானவை மற்றும் வெளிப்படையானவை" என்று சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த அறிவிப்பு
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்த போர் நிறுத்த அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் இணைத்துள்ளார்.
அந்த ஒப்பந்தத்தில் லெபனானும் அடங்கும் என்று ஷெரீப் கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
The Iran–U.S. Ceasefire terms are clear and explicit: the U.S. must choose—ceasefire or continued war via Israel. It cannot have both.
— Seyed Abbas Araghchi (@araghchi) April 8, 2026
The world sees the massacres in Lebanon. The ball is in the U.S. court, and the world is watching whether it will act on its commitments. pic.twitter.com/2bzVlHFKgi
அமெரிக்கா போர் நிறுத்தம் அல்லது இஸ்ரேல் வழியாகத் தொடரும் போர் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டையும் அதனால் கொண்டிருக்க முடியாது, என்று அராக்சி குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் நடக்கும் படுகொலைகளை உலகம் காண்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.
இறுதி முடிவு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது, அது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்நிறுத்தத்தை அறிவித்த 24 மணி நேரத்தில் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்! லெபனான் தாக்குதலுக்கான பதிலடி