ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்: அமெரிக்கா அதிரடி
ஈரான், சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது கடந்த மாதம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
சிரியாவின் எல்லை அருகே அமைந்துள்ள படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்திருந்ததுடன், மேலும், 40 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
அமெரிக்கா அதிரடி
இந்த தாக்குதலை சிரியாவில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஈராக், சிரியா மீது அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈராக், சிரியாவில் செயல்பட்டுவரும் ஈரான் புரட்சிப்படையின் ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆளில்லா விமான தாக்குதல்
இதன்போது 85 இலக்குகள் மீது 125 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியா, ஈராக்கில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழுக்களின் கட்டுப்பாட்டு மையங்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், ஆயுத சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam