இலங்கையில் சிகிச்சைப் பெற்ற அமெரிக்கப் பெண்ணின் நெகிழ்ச்சி செயல்
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்த அமெரிக்கப் (US) பெண் ஒருவர், தீவிர சிகிச்சைப் பிரிவின் பயன்பாட்டிற்காக ஒரு தொகுதி படுக்கைகளை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஜேப் ஜாப்சன் என்று அழைக்கப்படும் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார்.
மருத்துவமனையின் சேவைகள்
நன்கொடை அளிப்பதற்காக நடைபெற்ற விழாவில், அந்த பெண் மருத்துவமனையின் சேவைகள் குறித்து தனது பாராட்டுக்களை வழங்கியுள்ளார்.

அத்துடன், சிகிச்சையின் போது தனது உயிரைக் காப்பாற்றிய மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையின் துணை இயக்குநர் வைத்தியர் புபுது ரணவீர மற்றும் இருதய சிகிச்சைப் பிரிவின் மருத்துவ நிபுணர்கள். நன்கொடையாக வழங்கப்பட்ட படுக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில், வெளிநாட்டு பயணிகளுக்கு வழங்கப்படும் சுகாதார சேவையை எடுத்துக் காட்டும் முகமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 8 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan